அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்
— திருவள்ளுவர், திருக்குறள் 483
VV ka Vichar:
தகுந்த கருவிகளுடன், சரியான காலத்தை அறிந்து செயலில் இறங்கினால் செய்ய முடியாத அரிய செயல் எதுவும் இல்லை. சரியான நேரத்தில் செய்யும் செயலே வெற்றியைத் தரும். காலத்தை அறிந்து செயல்படுவதே காரிய வெற்றியின் திறவுகோல்.
